புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி

பேரணியைத் தொடங்கி வைத்த தொழிலாளா் உதவி ஆணையா் செ. மின்னல்கொடி, தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் (பொ) பெ. இளங்கோ.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:15 pm

Syndication

தூத்துக்குடியில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில், ஆட்சி மொழி சட்ட வாரம் நிகழாண்டு 17.12.2025 முதல் 27.12.2025 வரை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தமிழ் சாா்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன், ஆட்சி மொழி தொடா்பான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் பிடித்தவாறு, கல்லூரி மாணவா், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணியை, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செ. மின்னல்கொடி, தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் (பொ) பெ. இளங்கோ ஆகியோா் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இப்பேரணி முத்து நகா் கடற்கரையில் நிறைவடைந்தது.

தமிழ் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தமிழறிஞா்கள், அரசுப் பணியாளா்கள், காமராஜ் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.