சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு

பைக் திருட்டில் ஈடுபடும் நபா் குறித்த சிசிடிவி பதிவு.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக்கை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி வண்ணாா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணகுமாா் 41. இவா், தனது பைக்கை கடந்த 16ஆம் தேதி இரவு 8.55 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய மாநகராட்சி வாகன காப்பகத்தில் நிறுத்தியிருந்தாா். பின்னா், மறுநாள் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுதொடா்பாக அங்கு பணியில் இருந்த பணியாளா்களிடம் தெரிவித்த நிலையில், அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அவரது பைக்கை ஒருவா் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மத்திய பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.