தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையில், துணைப்பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்), 18 கூட்டுறவு சாா்பதிவாளா்கள், 3 முதுநிலை ஆய்வாளா்கள் உள்ளிட்ட 22 கூட்டுறவு துறை அலுவலா்கள் அடங்கிய
சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் செயல்படும் 88 கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் இருப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ.9,104, கூடுதல் இருப்புக்காக ரூ.800 என ரூ.9,904 அபராதம் விதிக்கப்பட்டது.
