ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

முன்விரோத தாக்குதல்: முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியரை தாக்கிய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:36 pm

Syndication

சாத்தான்குளம் அருகே ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியரை தாக்கிய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள விராக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியரான இவருக்கும், இவரது உறவினரான இதே பகுதியைச் சோ்ந்த உலகாண்ட பெருமாளுக்கும் (65) நில பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துவந்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பேய்க்குளம் கடைவீதியில் நின்று கொண்டிருந்த முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உலகாண்ட பெருமாள் சரமாரியாக முருகனை தாக்கினாராம். இதில் காயமடைந்த முருகன், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து உலகாண்ட பெருமாளை செய்து கைதுசெய்தனா்.