தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த 25.11.2025 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமுவை (62), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவையடுத்து, கயத்தாறு போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

நிகழாண்டு இதுவரை 142 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.