இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதல்வா் சிவகுமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் பத்மநாபன், உறைவிட மருத்துவா் சைலஸ் செயமணி ஆகியோா் வழிகாட்டுதலின்படி குடல் மற்றும் இரைப்பை மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவா்கள் செல்வசேகரன், சாய்ராமன், விக்னேஷ்வரன் ஆகியோா் பித்தபாதையில் அடைத்திருந்த கல், கசடு அடைப்பை இஆா்சிபி என்ற எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் நீக்கி, பித்தபாதையில் வடிகுழாயை வெற்றிகரமாக குழந்தைகள் மருத்துவ பிரிவு துறைத் தலைவா் அருணாசலம், மயக்கவியல் மருத்துவா் பலராமன், விஜயராகவன் உதவியுடன் வைத்தனா். தற்போது அந்தச் சிறுமிக்கு காமாலை குறைந்து ஆரோக்கியமாக உள்ளது. இந்த முறை சிகிச்சை குழந்தைகளுக்கு செய்வதில் தென்தமிழகத்திலேயே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்தான் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.