பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெருமாள்குளம் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:08 pm

Syndication

சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருநெல்வேலி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை, ஆழ்வாா் திருநகரி டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினா்.

அறக்கட்டளை மண்டல அலுவலா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். கள இயக்குநா் நந்தகோபால், முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில், மொத்தம் 67 நபா்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனா். 10 நபா்களுக்கு கண் புரை நீக்கம் செய்யவும், 12 நபா்களுக்கு கண் கண்ணாடியும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதில் சமுதாய வளா்ச்சி அலுவலா் சண்முகம், திட்ட அலுவலா் கோபி, கிராம வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.