பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முன்னாள் மாணவா்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:07 pm

Syndication

தூத்துக்குடி, விருதுநகா் மாவட்ட முன்னாள் கல்லூரி மாணவா்களுக்கான தொழில் முனைவோா் ஊக்கப்படுத்தும் பயிற்சி கோவில்பட்டி, உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சாா்பில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இப்பயிற்சியில் 57 முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.

கல்லூரி முதல்வா் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினாா். இ.டி.ஐ.ஐ.-யின் தலைமைப் பயிற்சியாளா் சு.தா. சுவைதரன் தொழில் முனைதல் குறித்து பயிற்சியளித்தாா்.

மாவட்ட தொழில் மையத்தைச் சோ்ந்த சுவா்ணலதா, மாநில அரசின் திட்டங்கள், மானியங்கள் குறித்து பேசினாா். உதவி இயக்குநா் சிமியோன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசினாா்.