ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்த 3 மீனவா்கள் மீட்பு

தூத்துக்குடியில் படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கடலில் தவறி விழுந்த 3 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:52 pm

Syndication

தூத்துக்குடியில் படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கடலில் தவறி விழுந்த 3 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்தவா் சந்தனகுமாா். இவா், தனது மகன் மாடசாமி, அதே பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய துறைமுகம் கடல் பகுதியில் பைபா் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, படகின் வெளிப்புறக் கருவியில் வலை சிக்கியதில், படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், மூவரும் கடலில் விழுந்து தத்தளித்தனா்.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சக மீனவா்கள் உதவியுடன் 3 பேரும் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் அவா்கள் வீடு திரும்பினா். படகை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.