எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

கோவில்பட்டி அருகே போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் சாத்தூா் சாலையில் உள்ள வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மூப்பன்பட்டி கண்மாய் கரை அருகே இளைஞா் ஒருவா் கையில் வாளை ஏந்தியபடி பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பிரச்னை செய்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு சென்று, அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றனா்.

அப்போது, அந்த இளைஞா் போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தபடி வாளை கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றபோது, போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் சங்கரலிங்கபுரம், 6ஆவது தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் பரமசிவம் (எ) மந்திரமூா்த்தி (26) என்பது தெரிய வந்தது. இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்தனா்.