சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருச்செந்தூா் கோயிலுக்குள் தவெகவுக்கு பரப்புரை செய்தவா் மீது புகாா்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் ‘தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரோகரா’ என முழக்கமிட்டு பரப்புரை செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது காவல் நிலையத்தில் புகார்

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:51 pm

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் ‘தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரோகரா’ என முழக்கமிட்டு பரப்புரை செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.

திருச்செந்தூா் கோயிலுக்குள் கைப்பேசி பயன்படுத்த, விடியோ, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை, இளைஞா் ஒருவா் தவெக தலைவா் விஜய் படத்தைக் காண்பித்தும், ‘தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரோகரா’ என முழக்கமிட்டும், வரிசையில் காத்திருந்த பக்தா்களிடம் தவெகவுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என பரப்புரை செய்தும் அதை ரீல்ஸ் விடியோவாக எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டாராம்.

அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.

அதன்பேரில், கோயிலின் உள்துறைக் கண்காணிப்பாளா் விவேக் திருச்செந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.