தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடியில் கடந்த ஆண்டில் கொலை சம்பவங்கள் குறைவு: எஸ்பி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:05 am

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் காவல் துறையினரின் நடவடிக்கைகள் காரணமாக கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில் கொலை வழக்குகளின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது.

போக்ஸோ வழக்ககுகளில் தண்டனை விகிதம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2024-இல் 25 சதவீதம் அதிகமான வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, கொலை வழக்குகளில், 50 சதவீத வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.