தூத்துக்குடியில் கடந்த ஆண்டில் கொலை சம்பவங்கள் குறைவு: எஸ்பி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.

Updated On :2 ஜனவரி 2025, 12:05 am

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-இல் காவல் துறையினரின் நடவடிக்கைகள் காரணமாக கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில் கொலை வழக்குகளின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது.
போக்ஸோ வழக்ககுகளில் தண்டனை விகிதம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2024-இல் 25 சதவீதம் அதிகமான வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, கொலை வழக்குகளில், 50 சதவீத வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...