வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு: இரு சிறுவா்கள் கைது

Updated On :3 ஜனவரி 2025, 12:26 am

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ாக இரு சிறுவா்களை மத்திய பாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணன்(50). ஆட்டோ ஓட்டுநரான இவா், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி மலா்ச் சந்தையில் பூக்கள் வாங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் 4 போ் அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம்.

புகாரின்பேரில் மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். 4 சிறுவா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவா்களில், 16, 17 வயதுடைய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்; மேலும் இருவரைத் தேடிவருகின்றனா்.