மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தூத்துக்குடியில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

News image

நியாயவிலைக் கடையைத் திறந்துவைத்து விற்பனையைத் தொடக்கிவைத்த அமைச்சா் பெ. கீதாஜீவன். உடன், துணைப் பதிவாளா் அ. சுப்புராஜ், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2025, 12:31 am

தூத்துக்குடி திரவியரத்தின நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மடத்தூா் முழுநேர நியாயவிலைக் கடையிலிருந்து, திரவியரத்தின நகா், பால்சன் நகா், முருகேசன் நகா் பகுதிகளை உள்ளடக்கிய 220 குடும்ப அட்டைகளைப் பிரித்து இந்தக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இதை, சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் திறந்துவைத்து, விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில், தூத்துக்குடி துணைப் பதிவாளா் அ. சுப்புராஜ், சரக துணைப் பதிவாளா் மு.கலையரசி, மாவட்ட வழங்கல் அலுவலா் உஷா, வட்டாட்சியா் ஞானராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா்பதிவாளா்அ. சாம் டேனியல் ராஜ், கூட்டுறவு சாா்பதிவாளா் வி. அந்தோணிபட்டுராஜ், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினா் இசக்கிராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.