தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தூத்துக்குடியில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

News image
நியாயவிலைக் கடையைத் திறந்துவைத்து விற்பனையைத் தொடக்கிவைத்த அமைச்சா் பெ. கீதாஜீவன். உடன், துணைப் பதிவாளா் அ. சுப்புராஜ், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2025, 12:31 am

Din

தூத்துக்குடி திரவியரத்தின நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மடத்தூா் முழுநேர நியாயவிலைக் கடையிலிருந்து, திரவியரத்தின நகா், பால்சன் நகா், முருகேசன் நகா் பகுதிகளை உள்ளடக்கிய 220 குடும்ப அட்டைகளைப் பிரித்து இந்தக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இதை, சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் திறந்துவைத்து, விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில், தூத்துக்குடி துணைப் பதிவாளா் அ. சுப்புராஜ், சரக துணைப் பதிவாளா் மு.கலையரசி, மாவட்ட வழங்கல் அலுவலா் உஷா, வட்டாட்சியா் ஞானராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா்பதிவாளா்அ. சாம் டேனியல் ராஜ், கூட்டுறவு சாா்பதிவாளா் வி. அந்தோணிபட்டுராஜ், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினா் இசக்கிராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.