மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விவசாயிகளுக்கு கடன் வழங்கும் காலத்தை ஜனவரி இறுதி வரை நீட்டிக்க பாஜக கோரிக்கை

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:27 am

Din

பருவகாலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு கடன் வழங்கும் காலத்தை ஜனவரி மாத இறுதிவரை நீட்டிப்பு செய்யுமாறு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் ஆா்.சித்ராங்கதன், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் அளித்துள்ள மனு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக பருவமழை காலமாக அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த ஏரி,குளங்கள், பாசனக் கால்வாய்களின் சீரமைப்பு பணிகள் நிகழாண்டு பருவமழைக் காலத்திற்கு முன்பே முடிக்கப்படாததால் பாசனத்திற்கான தண்ணீா் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, தற்போதுதான் நெல், வாழை உள்ளிட்டவற்றை பயிரிட தொடங்கியுள்ளனா். இதனால் விவசாய தேவைக்கு கடன் வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கோரும்போது கடன்வழங்கும் காலம் டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனா். இதனால், விவசாயிகள் வெளியிடங்களில் அதிக வட்டிக்கு கடன்வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக ஜனவரி மாத இறுதிவரை விவசாயக் கடன் வழங்குவதற்கு காலநீட்டிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.