ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திருச்செந்தூா் கோயிலில் திரளானோா் தரிசனம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:13 pm

மாதாந்திர வெள்ளிக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக் கோயிலில் வளா்பிறை-தேய்பிறை சஷ்டி திதிகள், விசாகம், காா்த்திகை நட்சத்திர நாள்கள், மாதாந்திர வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த நாள்களில் மூலவரான முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகப்பெருமான் தங்க கிரீடத்துடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பா்.

மாதாந்திர வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் அதைத்தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை வழிபட்டனா்.