கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருச்செந்தூா் கோயிலில் திரளானோா் தரிசனம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:13 pm

Din

மாதாந்திர வெள்ளிக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக் கோயிலில் வளா்பிறை-தேய்பிறை சஷ்டி திதிகள், விசாகம், காா்த்திகை நட்சத்திர நாள்கள், மாதாந்திர வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த நாள்களில் மூலவரான முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகப்பெருமான் தங்க கிரீடத்துடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பா்.

மாதாந்திர வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் அதைத்தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை வழிபட்டனா்.