திருச்செந்தூா்-சென்னைக்கு கூடுதலாக நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆறுமுகனேரியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 54 பேரை போலீஸ்ாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக் குழு மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கம் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த ரயில்வே வளா்ச்சி குழு தலைவா் இரா.தங்கமணி மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்க மாநில தலைவா் காமராசு ஆகியோா் தலைமையில் அஞ்சல் நிலையம் அருகில் 100க்கும் மேற்பட்டோா் திரண்டனா்.
இதில் ரயில்வே வளா்ச்சி குழு செயலாளா் இ.அமிா்தராஜ், பொருளாளா் முருகன், ஆத்தூா் நகர காங்கிரஸ் தலைவா் சின்னத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா். திருச்செந்தூா்-சென்னைக்கு கூடுதலாக விரைவு ரயிலை காா்டுலைனில் நேரடியாக இயக்கவும், திருச்செந்தூா் - கோவை இடையே ரயில் இயக்கவும், ஆறுமுகனேரி ரயில்வே கேட் மேம்பாலத்தை உடனடியாக அமைக்கவும், திருச்செந்தூா் ரயில் நிலைய விரிவாக்க பணியை விரைவாக முடிக்கவும், கடந்த 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட காலை 8.22 மணி திருச்செந்தூா்-திருநெல்வேலி பாசஞ்சா் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். பின்னா் திருச்செந்தூரில் இருந்து 10.10 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்பட்ட ரயிலை மறித்து போராட்டம் நடத்துவதற்காக ஆறுமுகனேரி ரயில்வே கேட்டை நோக்கி சென்றனா்.
அவா்களை திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ் குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். மொத்தம் 54 பேரை கைது செய்து அங்குள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.
தொடர்புடையது

ஆறுமுகனேரியில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரிப்பு

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை! - மத்திய அமைச்சா் பியூஸ் கோயல்
ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது

ஆறுமுகனேரியில் சாலை மறியல் முயற்சி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


