வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 160 கிலோ குட்கா பறிமுதல்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:52 pm

பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட சுமாா் 160 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மைசூா் விரைவு ரயிலில் புகையிலைப் பொருள்களை தூத்துக்குடிக்கு கடத்தி வருவதாக ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் ரயில்வே போலீஸாா் அந்த ரயிலின் சரக்குப் பெட்டியில் வந்த சந்தேகத்துக்குரிய பொருள்களை சோதனையிட்டனா். அதில் 3 பண்டல்களில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 160 கிலோ எடையுள்ள அந்த புகையிலைப் பொருள்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 1.62 லட்சம். இவற்றை கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் மகாகிருஷ்ணன், பெருமாள் உள்ளிட்டோா் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பனிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.