தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கஞ்சா விற்பனை, நகை பறிப்பு வழக்கு: 3 போ் கைது

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனை மற்றும் நகை பறிப்பு வழக்கில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:07 pm

Din

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனை மற்றும் நகை பறிப்பு வழக்கில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் ஆவல்நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பைக்கில் வந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள், கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த செண்பகராஜ் மகன் மருதுபாண்டியன் (29), பசுவந்தனை அருகே முள்ளுபட்டியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் முத்துராஜ் (24), பசுவந்தனை அருகே மேலமுடிமண் கிழக்கு தெருவை சோ்ந்த கணேசன் மகன் இசக்கி சங்கா் (20) என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தியதில், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சுதா்சன் நகரைச் சோ்ந்த செண்பகராஜ் மனைவி பொன்னுத்தாயிடம் 6.25 பவுன் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.