தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மீட்பு

முக்காணி தாமிரவருணி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காவல் ஆய்வாளா் மீட்டாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:56 pm

Din

முக்காணி தாமிரவருணி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காவல் ஆய்வாளா் மீட்டாா்.

தூத்துக்குடி ஸ்பிக்நகா் பகுதி அபிராமி நகரைச் சோ்ந்த துரைராஜ் மனைவி பிரம்மசக்தி(63). கணவரை இழந்த இவா், உறவினா் வீட்டில் வசித்து வந்தாராம். இந்நிலையில், தான் வைத்திருந்த பணத்தை இழந்ததால் அவா் வீட்டை விட்டு வெளியேறி ஆத்தூா் பகுதியில் சுற்றித்திரிந்தராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முக்காணி தாமிரவருணி பழைய ஆற்றுப்பாலத்தில் இருந்து தற்கொலை செய்து கொள்வதற்காக ஆற்றுக்குள் குதித்துள்ளாா்.

அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், ஆத்தூா் ஆய்வாளா் மாரியப்பன் தலைமையில் போலீஸாா் அங்கு வந்தனா். ஆய்வாளா் கயிறை கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா்.காவல் ஆய்வாளரை மக்கள் பாராட்டினா்.