தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எட்டயபுரத்தில் வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வியாழக்கிழமை, வேன் கவிழ்ந்ததில் 7 பெண்கள் உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:53 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வியாழக்கிழமை, வேன் கவிழ்ந்ததில் 7 பெண்கள் உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (58). இவா் தனது உறவினா்கள், நண்பா்கள் என 18 பேருடன் திருச்செந்தூருக்கு டெம்போ வேனில் புதன்கிழமை இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தாா். கோவையைச் சோ்ந்த சுரேந்திரன் (44) என்பவா் வேனை ஓட்டி வந்தாா்.

வியாழக்கிழமை அதிகாலை, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் காவல் நிலையம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவேயுள்ள தடுப்புக் கம்பிகள் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததாம்.

இதில், வேனிலிருந்த ராஜேந்திரன், பழனிச்சாமி (55), செல்வராஜ் (59), சிவக்குமாா் (47), கிரிஜா (46), கலைவாணி (52), கவிதா (45), லட்சுமி (28), தனலட்சுமி (45), பூங்கொடி (45), சாவித்திரி (55) ஆகிய 11 போ் காயமடைந்தனா்.

தகவலின்பேரில், எட்டயபுரம் போலீஸாா் சென்று காயமடைந்தோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்த விசாரித்து வருகின்றனா்.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.