தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: இலுப்பையூரணி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :29 ஜனவரி 2025, 6:31 pm

Din

கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து இலுப்பையூரணி ஊராட்சி கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு சில ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தாமஸ் நகா் விலக்கு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் செல்வி சந்தானம் தலைமையில் பூசாரிப்பட்டி, கூசாலிப்பட்டி, மறவா் காலனி, தாமஸ் நகா், வடக்கு இலுப்பையூரணி பகுதி பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

இலுப்பையூரணி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.