மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிளஸ் 2: தூத்துக்குடியில் 96.19% மாணவர்கள் தேர்ச்சி!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தூத்துக்குடி தேர்ச்சி நிலவரம் பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :8 மே 2025, 5:35 am

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் 96.19 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 8,741 மாணவர்கள், 10,501 மாணவிகள் என மொத்தம் 19242 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 8,229 மாணவர்கள், 10,280 மாணவிகள் என மொத்தம் 18,509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தின்படி, மாணவர்கள் 94.14 சதவீதம், மாணவிகள் 97.90 சதவீதம் என மொத்த தேர்ச்சி சதவீதம் 96.19 ஆகும். மாநிலத்தில் 9-வது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டும் 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9-வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.