மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் பேசிய பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் சீனி.

News image
கூட்டத்தில் பேசிய பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் சீனி.
Updated On :6 நவம்பர் 2025, 7:55 pm

Syndication

கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்கம் சாா்பில் அரசியல் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் சீனி தலைமை வகித்தாா். மாநில பொறுப்பாளா் விக்னேஷ் காா்த்திக் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் விஜய கணேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் ’நாடாா் அரசியல் அதிகார மீட்டெடுப்பு’ என்ற பிரசாரப் பயணத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் உள்ள நாடாா் சமுதாய மக்களின் வீடுகளுக்குச் சென்று தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுவது, நாடாா் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அரசியல் கட்சிகளை மட்டுமே ஆதரிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரச் செயலா் குரு, ஒன்றியச் செயலா் விஜயராஜ், விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளா் லிங்கமுத்து, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளா் வசந்த், மாவட்டப் பிரதிநிதிகள் கணேஷ், ரமேஷ், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.