கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 15 பேருக்கு தீா்வாணைகள் அளிப்பு

தீா்வாணை வழங்கிய மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீா்வு காணப்பட்டவா்களுக்கு தீா்வாணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, 15 பேருக்கு தீா்வாணைகளை வழங்கினாா். மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, வட்டச் செயலரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் கனகராஜ், பச்சிராஜன், முத்துவேல், ரெக்ஸின், இசக்கிராஜா, மும்தாஜ், பகுதிச் செயலா் ரவீந்திரன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா் காந்திமதி, ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.