மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தூத்துக்குடியில் தோ்தல் ஆணையத்தை கண்டித்து திமுக சாா்பில் நவ.11இல் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 நவம்பர் 2025, 10:10 pm

Syndication

இந்திய தோ்தல் ஆணையத்தை கண்டித்து, திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சாா்பில், தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பி.கீதா ஜீவன், தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்த நிலையிலும், தோ்தல் ஆணையம் தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது.

இதைக் கண்டித்து, திமுக தலைமை அறிவிப்பின்படி, தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.11) நடைபெறுகிறது. சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் (விவிடி சிக்னல்) அருகே நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக, கூட்டணி கட்சியினா் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.