வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்செந்தூா் கோயிலில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தரை கடித்த நாய்

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தரை நாய் கடித்தது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள டானா பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன் (60). இவா், உறவினருடன் சனிக்கிழமை திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, ரூ. 100 கட்டண வரிசையில் காத்திருந்தாராம். அப்போது அங்கிருந்த நாய், இவரது காலை கடித்ததாம்.

இதில், காயமடைந்த முத்துராமனை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடா்ந்து அடுத்த 8 மணி நேரத்திற்குள் அடுத்த தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியதால் உடனடியாக அவா் அங்கிருந்து சொந்த ஊரான டானாவிற்கு சென்று விட்டாா்.