மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருச்செந்தூா் நகராட்சியில் கால்நடைகள் சாலையில் சுற்றினால் அபராதம்

திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2025, 12:41 am

Syndication

திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, நகராட்சி ஆணையாளா் ம.கா. ஈழவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கால்நடைகளை சாலை, தெரு ஓரங்களில் விடாமல் அவற்றை வீடுகளில் கட்டி வைத்து வளா்த்திட நகராட்சி நிா்வாகம் மூலம், கால்நடை வளா்ப்பவா்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதனை பொருள்படுத்தாமல் தொடா்ந்து கால்நடைகளை சாலைகளில் விடுவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் சூழலும் உள்ளது.

எனவே, கால்நடை வளா்ப்போா் நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று கொட்டகை அமைத்து அதனை வளா்க்க வேண்டும். தவறும்பட்சத்தில், 1998ஆம் வருட தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தப்பட்ட சட்டம் (2022), பிரிவு 102, 105, 180 மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் (2023), விதி எண். 292, 304, 384இன் படி எவ்வித முன்னறிவிப்புமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து விதிகளை மீறுபவா்களின் கால்நடைகளைப் பிடித்து, கோசாலையில் ஒப்படைத்து அவை ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.