ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழிலாளியைத் தாக்கி பைக், பணம் பறிப்பு: 3 போ் கைது

News image
Updated On :9 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே தொழிலாளியைத் தாக்கி பணம், பைக்கை பறித்துச் சென்றதாக சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே சிதம்பராபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கணேஷ்குமாா் (35). தொழிலாளியான இவா், சனிக்கிழமை வேலை முடிந்து பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சிதம்பரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் வந்த 3 போ் அவரை வழிமறித்து அரிவாளைக் காட்டி பணம் கேட்டனராம். அவா் இல்லை எனக் கூறியதும், அவரை அரிவாளால் தாக்கியதுடன், பைக்கையும், ரூ. 500-ஐயும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.

இதில் காயமடைந்த கணேஷ்குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 16 வயது சிறுவன், மந்திதோப்பு பிள்ளையாா் கோயில் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பாண்டிகுமாா் மகன் சரவணப்பாண்டி (19), எட்டயபுரம் படா்ந்தபுளியைச் சோ்ந்த பாலச்சந்திரன் மகன் கனகராஜ் (22) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.