நாசரேத் பொறியியல் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

நாசரேத் பொறியியல் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

Published on

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றிய விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பேராசிரியை ஜேப்னி வரவேற்றாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்ய வேண்டிய வழிமுறை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தாா்.

இதில்,தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சின்னத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞானசெல்வன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் காபிரியேல் தேவயிரக்கம் ஜெபராஜன், கல்லூரி முதல்வா், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com