தூத்துக்குடி
நாசரேத் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தேசிய சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தான்குளம்: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தேசிய சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ( பொறுப்பு) ஆக்னஸ் பிரேமா மேரி தலைமை வகித்தாா். பேராசிரியை ஜேப்னி வரவேற்றாா். நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், உதவி ஆய்வாளா் சுந்தரம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பேசினா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்- மாணவிகள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞானசெல்வன் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் கபிரியேல் தேவ இரக்கம், முதல்வா் ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

