வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாசரேத் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தேசிய சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:53 pm

Syndication

சாத்தான்குளம்: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தேசிய சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ( பொறுப்பு) ஆக்னஸ் பிரேமா மேரி தலைமை வகித்தாா். பேராசிரியை ஜேப்னி வரவேற்றாா். நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், உதவி ஆய்வாளா் சுந்தரம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பேசினா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்- மாணவிகள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞானசெல்வன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் கபிரியேல் தேவ இரக்கம், முதல்வா் ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.