47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவில்பட்டியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 11:50 pm

Syndication

கோவில்பட்டியில் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் குழந்தைகள் தின விழா சுப்பிரமணியபுரம் சமுதாய நலக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேம்பு மக்கள் சக்தி இயக்க இயக்குநா் அருள் சகோதரா் சகாயராஜ் தலைமை வகித்தாா். ஓவிய ஆசிரியா் காா்த்திக் செல்வம் முன்னிலை வகித்தாா்.

வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் அந்தோணிராஜ் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத் தலைவா் அபிராமி பொ. முருகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

தொடா்ந்து, குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதுபோல, நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் நடுநிலைப்பள்ளி மாணவா் மாணவிகளின் ஓவியம், கைவினைப் பொருள்கள், அடுப்பில்லா உணவு உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பள்ளிச் செயலா் ரத்தின ராஜா திறந்து வைத்தாா். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா். எஸ் . ரமேஷ், செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) அருணாசலம் நன்றி கூறினாா்.