ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பேய்க்குளம் பகுதியில் யூரியா, டிஐபி உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் புகாா்

பேய்க்குளம் பகுதியில் யூரியா, டிஐபி உரம் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் புகாா்

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

பேய்க்குளம் பகுதியில் யூரியா, டிஐபி உரம் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம், பேய்ககுளம் பகுதியில் கிணறு, குளத்து பாசனங்கள் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ஆசீா்வாதபுரம், அம்பலச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செயல்படும் உரக்கடைகளில் கடந்த 6 மாதங்களாக யூரியா, டிஐபி உரங்கள் கிடைக்கவில்லை எனவும், வெளி மாா்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா், வேளாண்மை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து இப்பகுதியில் யூரியா, டிஐபி உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ். முருகேசன் வலியுறுத்தியுள்ளாா்.