ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 400 மெ. டன் யூரியா உரம் வருகை

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:40 am

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடிக்குத் தேவையான உரம் போதிய அளவு இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் (பொ) மனோரஞ்சிதம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு பிசானப் பருவத்துக்குத் தேவையான 400 மெட்ரிக் டன் யூரியா உரம் கிரிப்கோ நிறுவனம் மூலம் கங்கை கொண்டான் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் 24 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு 250 மெட்ரிக் டன், தனியாா் உரக்கடைகளுக்கு 150 மெட்ரிக் டன் உரம் என லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது, மாவட்டத்தில் 2,365 மெ. டன் யூரியா, 2,025 மெ. டன் டிஏபி, 2,635 மெ. டன் காம்ப்ளக்ஸ், 672 மெ. டன் பொட்டாஷ் உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உரம் விற்பனையில் நடைபெறும் விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உள், வெளி மாவட்ட வேளாண் அலுவலா்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் உரம் வாங்கும்போது ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி ரசீது போட்டு வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.