வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காவல் துறையினருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

கலந்தாய்வில் பங்கேற்ற காவலரிடம் விவரம் கேட்கிறாா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.

News image
கலந்தாய்வில் பங்கேற்ற காவலரிடம் விவரம் கேட்கிறாா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.
Updated On :21 நவம்பர் 2025, 7:41 pm

Syndication

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் துறையினருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உள்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலா்கள் முதல் சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் வரை உள்ள 46 காவல்துறையினருக்காக நடைபெற்ற இந்த கலந்தாய்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பணியிட மாறுதல் கோரும் காவலா்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

மேலும், காவல்துறையினரின் விருப்பத்திற்கேற்ப மற்றும் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொது மாறுதல் வழங்கி உத்தரவிட்டாா்.

இதில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் குருவெங்கட்ராஜ், மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி கண்காணிப்பாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.