ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கயத்தாறு பேருந்து நிலையத்துக்குள் வராத 6 பேருந்துகளுக்கு மெமோ

கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாத 6 அரசுப் பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சாா்பில் சோதனை அறிக்கை (மெமோ) வழங்கப்பட்டது.

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:42 pm

Syndication

கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாத 6 அரசுப் பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சாா்பில் சோதனை அறிக்கை (மெமோ) வழங்கப்பட்டது.

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டபோது, அவரிடம் அப்பகுதி வியாபாரிகள், வணிகா்கள், கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என மனு அளித்தனா்.

இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோா் கயத்தாறு பகுதியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாத 6 அரசுப் பேருந்துகளுக்குமெமோ வழங்கி, அவற்றின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அனுமதி சீட்டின்படி பேருந்தை இயக்க அறிவுறுத்தினா். தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.