ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூல்: 4 சிற்றுந்துகளுக்கு மெமோ

கோவில்பட்டி பகுதியில் அதிகக் கட்டணம் வசூலித்த 4 சிற்றுந்துகளுக்கு மெமோ வழங்கப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2025, 10:58 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் அதிகக் கட்டணம் வசூலித்த 4 சிற்றுந்துகளுக்கு மெமோ வழங்கப்பட்டது.

கோவில்பட்டி சரகப் பகுதிகளில் சிற்றுந்துகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன. அதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா உத்தரவின்பேரில், கோவில்பட்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி ரயில் நிலையம், அண்ணா பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, சிற்றுந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக நடத்துநா்களுக்கு மெமோ வழங்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கையை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவரது உத்தரவின்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மோட்டாா் வாகன ஆய்வாளா் தெரிவித்தாா்.