சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு

News image
இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 8:34 pm

Syndication

தூத்துக்குடி: இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா். மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் தீபு , சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜமால் உள்பட காவல்துறையினா், மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிா்வாக அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையா் சி.ப்ரியங்கா முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனா். இதில், மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.