வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 1:36 am

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, முதலாவது, இரண்டாவது அலகுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. 4, 5-ஆவது அலகுகள் பராமரிப்புப் பணிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு, 3-ஆவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 3-ஆவது அலகிலும் செவ்வாய்க்கிழமை பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், புதன்கிழமை 3-ஆவது அலகில் இருந்து மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.