ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

திரு இருதய பேராலயத்தில் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்ற ஆயா் ஸ்டீபன் அந்தோணி.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:19 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடா்களுடன் அமா்ந்து உணவு உண்டாா்என்றும், அப்போது, ஒருவருக்கொருவா் அன்பு செய்து தாழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணா்த்தும் வகையிலும் சீடா்களின் பாதங்களை இயேசு கழுவினாா் என்றும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தவக்காலத்தின் கடைசி வாரமாக கருதப்படும் புனித வாரத்தில் பாதம் கழுவும் சடங்கு முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, தூத்துக்குடி சின்னக்கோயில் என்று அழைக்கப்படும் திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது முதியவா்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவா்களுக்கு ரொட்டிகளையும், பரிசுப் பொருள்களையும் அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

இயேசு உயிா் நீத்த தினமான புனித வெள்ளி ஏப்.3இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது.