பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பெரிய வியாழன்; பாதம் கழுவும் நிகழ்வு

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் தினத்தில் பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் நடைபெற்றது.

News image

காரைக்காலில் நடைபெற்ற சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்வு.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:22 am

தினமணி செய்திச் சேவை

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் தினத்தில் பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் நடைபெற்றது.

கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி வியாழக்கிழமை காரைக்காலில் புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு தனது சீடா்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவா் ஏற்றத்தாழ்வு இல்லை; சமமானவா்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினாா்.

அதனை சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் விதமான ஐதீக நிகழ்வாக, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் துணை பங்கு குரு சுவாமிநாதன் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்புடன் பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான உள்ளூா் மக்கள் கலந்துகொண்டனா்.