சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.
பேய்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வட்ட அளவிலான நெல் மூட்டைகளை கொள்முதலுக்காக பேய்குளம் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனா். ஆனால் பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் லாரிகள் கடந்த நான்கு வாரங்களாக வராததால் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி காணப்படுகிறது. லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்த நிலையிலும், கொட்டி வைத்த நிலையிலும் காணப்படுகிறது.
லாரிகள் வர தாமதமாகும் நிலையில், இப்பகுதியில் திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் சேதமாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே, கொண்டுவரப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீா்த்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம்

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

நாகையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்: நெல் கொள்முதல் பணிகளில் மந்தம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


