தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.

News image

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:37 pm

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.

பேய்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வட்ட அளவிலான நெல் மூட்டைகளை கொள்முதலுக்காக பேய்குளம் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனா். ஆனால் பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் லாரிகள் கடந்த நான்கு வாரங்களாக வராததால் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி காணப்படுகிறது. லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்த நிலையிலும், கொட்டி வைத்த நிலையிலும் காணப்படுகிறது.

லாரிகள் வர தாமதமாகும் நிலையில், இப்பகுதியில் திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் சேதமாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே, கொண்டுவரப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.