அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.

News image

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:37 pm

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.

பேய்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வட்ட அளவிலான நெல் மூட்டைகளை கொள்முதலுக்காக பேய்குளம் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனா். ஆனால் பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் லாரிகள் கடந்த நான்கு வாரங்களாக வராததால் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி காணப்படுகிறது. லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்த நிலையிலும், கொட்டி வைத்த நிலையிலும் காணப்படுகிறது.

லாரிகள் வர தாமதமாகும் நிலையில், இப்பகுதியில் திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் சேதமாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே, கொண்டுவரப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.