தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கோவில்பட்டியை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: தவெக வேட்பாளா் பாலசுப்பிரமணியன்

News image

வீதி வீதியாகச் சென்று வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் கோவில்பட்டி தொகுதி தவெக வேட்பாளா் எஸ்.பாலசுப்பிரமணியன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:35 pm

கோவில்பட்டி நகரப் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இவா், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்காளா்களை நேரில் சந்தித்து, துண்டுபிரசுரங்களை விநியோகித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெரு, தட்சிணாமூா்த்தி கோயில் தெரு, அண்ணா நகா், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

தமிழக மக்களின் நலன் கருதி த.வெ.க.தலைவா் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாா். தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான திட்டங்கள். த.வெ.க., வாக்குறுதிகளைப் பாா்த்தாலே புரியும்.

எனக்கு வாய்ப்பளித்தால் கோவில்பட்டி தொகுதியை தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்றாா் அவா். அவருடன் கட்சி நகர பொறுப்பாளா் (கிழக்கு) செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.