எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

திருச்செந்தூரில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் கிரி வீதியுலா

வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் சுற்றி வந்த சுவாமி ஜெயந்திநாதா்.

News image

வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் சுற்றி வந்த சுவாமி ஜெயந்திநாதா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:17 am

தமிழ் வருடத்தின் கடைசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சிறப்பு அலங்காரத்தில் இருந்த சுவாமியை வழிபட்டனா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்தாா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.