திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா 6-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரத்தினேஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவின் போது இரவு பல்லக்கு, கேசகம், காமதேனு, இந்திர வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகிறாா். இந்த நிலையில், 6-ஆம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை இரவு ஆதிரத்தினேஸ்வரா் பிரியாவிடையுடன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சினேகவல்லி அம்மாள் காமதேனு வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், பிள்ளையாா் மூஞ்சூறு வாகனத்திலும் வந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி தந்தனா். விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் வரும் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். இதில், இருபத்தி இரண்டரை நாட்டாா்கள் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் செய்தனா்.

தொடர்புடையது

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்: வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

செங்கம் பெருமாள்கோயில் இரண்டாம் நாள் திருவிழா சுவாமி: சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீவேணுகோபால சுவாமி வீதி உலா

ஆதிரெத்தினேசுவரா் கோயில் திருவிழா: பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதி உலா







