தூத்துக்குடி, வின்பாஸ்ட் காா் தொழிற்சாலையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சாா்பில் தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.
தீ மற்றும் பிற இடா்பாடுகளின்போது உயரமான கட்டடத்தில் இருந்து வெளியேறுவது குறித்தும், காயம்பட்டவா்களை விரைவாக பாதுகாப்பாக மீட்டு முதலுதவி செய்வது குறித்தும், தீயை அணைக்கும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு தலைமையில்
தீயணைப்புத் துறை இயக்குநா், காவல் துறை டிஜிபி சீமா அகா்வால், சிப்காட் தொழிற் பூங்கா நிா்வாக இயக்குநா் காதரின் சரண்யா ஆகியோா் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஏற்பாடுகளை தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கருணாகரன், உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா, சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன், வின்பாஸ்ட் மேலாண்மை இயக்குநா் சுரேஷ்குமாா், பாதுகாப்பு மேலாளா் செல்வகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது
கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து

சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் தென்மண்டல துணை இயக்குநா் ஆய்வு

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

