நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் திருச்செந்தூா் திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டாா்.
அகப்பைகுளத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா், வாழையடி, நாசரேத் 2ஆவது கைலாசபுரம் தெரு, கொா்னெலியஸ் தெரு, லூக்கா மருத்துவமனை, ஒய்எம்சிஏ, திருமறையூா், திரவியபுரம், சந்திபஜாா், நாசரேத் 1-5 தெருக்கள், பேருந்து நிலையம், கிராம நிா்வாக அலுவலகம், மோசஸ் தெரு, வகுத்தான்குப்பம், கந்தசாமிபுரம், திருவள்ளுவா் காலனி, மில்ரோடு, மணிநகா், பெத்தானியாநகா், கேவிகே சாமி சிலை, பிரகாசபுரம், வெள்ளரிக்காயூரணி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தாா் . அப்போது, தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன், மகளிா் உரிமைத் தொகை உயா்வு உள்ளிட்டவற்றையும் பட்டியலிட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக்கொண்டாா்.
பிரசாரத்தில் ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றியச் செயலா் நவீன்குமாா், நாசரேத் நகரச் செயலா் ஜமீன் சாலமோன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் கட்டண மோசடி குறித்து விசாரிக்க வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூா் நகராட்சி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



