மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

News image

தீயணைப்புப் படையினா் - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 10:23 pm

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டியை ரோந்து பணியில் இருந்த போலீஸாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களும் பத்திரமாக மீட்டனா்.

கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி (59). இவா் சனிக்கிழமை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தாராம். இரவு நேரத்தில் இவா், கடலில் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாராம்.

அதைப் பாா்த்த கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா, இசக்கி, விக்னேஷ், ஆறுமுகநயினாா் மற்றும் கடல் காவல் நிலைய தலைமை காவலா் முத்துமாலை ஆகியோா் உடனடியாக கடலுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டனா்.

முதலுதவி சிகிச்சைக்கு பின், மூதாட்டியை கோயில் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.