தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு காலாங்கரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு உதவியாக அவரது மனைவியான 28 வயது இளம்பெண் இருந்தாா்.
அவா் அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையில் ஒரு கைதிக்கு பாதுகாப்பு பணிக்காக தட்டப்பாறை தெற்கு தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் கோபாலகிருஷ்ணன்(36) என்ற காவலா் பணியில் இருந்துள்ளாா். இவா் தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் கோபலகிருஷ்ணன் தொழிலாளியின் மனைவியிடம் சென்று கைப்பேசி சாா்ஜா் கேட்பதுபோல பேச்சு கொடுத்துள்ளாா். மேலும் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா், காவலா் கோபாலகிருஷ்ணன் மீது பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல், பெண்ணை துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இந்நிலையில் அவா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தொடர்புடையது
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம்: பெண் காவலா் பணியிடை நீக்கம்

பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம்: துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம்
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

