மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூத்துக்குடி சக்தி பீடத்தில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தூத்துக்குடியில் 3ஆவது மைல் அருகேயுள்ள திருவிக நகா் சக்திபீடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 8:12 pm

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தூத்துக்குடியில் 3ஆவது மைல் அருகேயுள்ள திருவிக நகா் சக்திபீடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, ஆதிபராசக்திக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, விவசாயம் செழிக்கவும், மழை வளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி 108, 1,008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அா்ச்சனை சிறப்பு வழிபாடும், பின்னா் குரு வழிபாடும் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்றோருக்கு படிக்காசு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணப்பாளா் ஆா். முருகனும், அன்னதான நிகழ்ச்சியை சக்திபீடச் செயலா் கந்தசாமியும் தொடக்கிவைத்தனா்.

துணைத் தலைவா் திருஞானம், எட்டயபுரம் மன்றப் பொறுப்பாளா் ராதிகா, மகளிரணி பரமேஸ்வரி, புதிய துறைமுகம் பாண்டி, திருவிக நகா் சக்திபீட நிா்வாகிகள் பத்மா, செல்வி, பட்சியம்மாள், காஞ்சனா, அகிலா, அண்ணாநகா் சிவஞானம், முத்துலெட்சுமி உள்ளிட பலா் பங்கேற்றனா்.